விஜய்க்கு இந்த 2 நடிகைகள் மீது பயங்கர கிரஷ்ஷாம் பாஸ்

தனக்கு எந்தெந்த நடிகைகள் மீது கிரஷ் என்பதை தெரிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலான விஜய் தேவரகொண்டா பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் பெரிய ஹிட். மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடிக்க மாட்டேன் என்று இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹரிடம் விஜய் தெரிவித்தார்.

இருப்பினும் கரண் ஜோஹர் அளிக்கும் பார்ட்டிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார். அப்படி அண்மையில் நடந்த பார்ட்டியில் விஜய் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. விஜய் தேவரகொண்டா மீது கல்லூரி மாணவிகள், நடிகைகள் என்று பலருக்கும் கிரஷ் உள்ளது.

இந்நிலையில் அவர் தனக்கு இரண்டு நடிகைகள் மீது கிரஷ் அதாவது ஈர்ப்பு என்று தெரிவித்துள்ளார். அந்த இரண்டு பேர் யார் என்றால் பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட். பேட்டி ஒன்றில் விஜய் தனது கிரஷ் பற்றி கூறி அதில் தீபிகாவுக்கு திருமணமாகிவிட்டது என்றார். இதை கேட்ட தீபிகாவோ ஆலியாவுக்கு விரைவில் திருமணம் ஆகப் போகிறது என்று கூறினார்.

ஆலியா பட்டும் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும் காதலித்து வருகிறார்கள். அவர்களுக்கு எப்பொழுது திருமணம் என்பதை மட்டும் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் தான் தீபிகா அதை உளறிவிட்டார். ரன்பிர் கபூரை ஒரு காலத்தில் காதலித்தபோதிலும் தற்போதும் அவருடன் நட்பாக பழிக அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார் தீபிகா. மேலும் ஆலியா பட்டுடனும் நட்பாக உள்ளார் அவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!