என்னாது, எனக்கு திருமணமா?: உண்மையை சொன்ன யோகி பாபு

வடிவேலு இடியாப்ப சிக்கிலில் சிக்கியதாலும், சந்தானம் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடிப்பதாலும் இன்றைய தேதிக்கு கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ளார் யோகி பாபு.

நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகி பாபு ஹீரோவாகிவிட்டார். கை நிறைய சம்பாதிக்கிறார், வீடு கட்டிவிட்டார், நிலம் வாங்கிப் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் யோகி பாபு ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதை பார்த்தவர்கள் யோகி பாபுவுக்கு திருமணம் என்று பேசத் துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் இது குறித்து அறிந்த யோகி பாபு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,

என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி என்று தெரிவித்துள்ளார்.

யோகி பாபு விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். அதை அவர் நிறைவேற்றி வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். யோகி பாபு ரஜினிகாந்தின் தர்பார், சிவகார்த்திகேயனின் ஹீரோ, விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!