விஜய்யின் ஒவ்வொரு ஆடியோ லாஞ்சுக்கும் வெயிட் பண்ணுனேன்: சாய் தன்ஷிகா!

விஜய்யின் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் அவரது பேச்சை கேட்பதற்கு ஆவலுடன் காத்திருந்தேன். அவர் தான் இன்ஸ்பிரேஷன் என்று நடிகை சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார்.

திருடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை சாய் தன்ஷிகா. இப்படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். எனினும், ரஜினிகாந்த் நடிப்பில் வந்த கபாலி படத்தில் அவருக்கு மகளாக நடித்து அனைவரிடமும் நல்ல வரவேற்புப் பெற்றார். இப்படம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சாய் தன்ஷிகா தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து, சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: சினிமாவில் நடிகர்கள் மீது உள்ள ஈர்ப்பு குறித்து தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அதில், சிறு வயதாக இருக்கும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன். அதன் பிறகு சிம்பு. தற்போது ஹிருத்திக் ரோஷன் மற்றும் மகேஷ் பாபு ஆகியோரை குறிப்பிடலாம். ஈர்ப்பு எல்லோர் மீதும் இருக்கத்தான் செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

யோகிடா படப்பிடிப்பின் போது எனது சண்டைக்காட்சியைப் பார்த்து ரஜினிகாந்த் பெருமையாக பேசினார். கபாலி படத்திற்குப் பிறகு ஜெய்ப்பூரில் நடந்த தர்பார் படப்பிடிப்பின் போது தான் ரஜினியை சந்தித்தேன். அமைதியான மனிதன் என்றார். மேலும், தனக்கு தூண்டுதலாக இருப்பது விஜய் தான். அவர் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழாவின் போதும் அவரது பேச்சைக் கேட்பதற்கு ஆவலுடன் காத்திருந்தேன். அவரது பேச்சு தூண்டுதலாகவும், உற்சாகமாகவும் இருக்கும் என்றார்.

மேலும், தனக்கு வரும் வருங்கால கணவர் எப்படியிருக்க வேண்டும் என்பதும் குறித்தும் சாடமாடையாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், நம்பிக்கையுள்ள ஒரு ஆண்மகனை தேடுவதாக தெரிவித்துள்ளார். தற்போது சுந்தர் சி நடிப்பில் உருவாகியுள்ள இருட்டு படத்தில் நடித்துள்ளார். மேலும், யோகிடா, லாபம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!