என்னிடம் இது தான் அழகு என்றார் வருங்கால கணவர்: மீரா மிதுன்

தன் வருங்கால கணவருக்கு தன்னிடம் மிகவும் பிடித்தது என்னவென்று மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பிறகு மும்பையில் செட்டிலான மீரா மிதுன் ஊழலை ஒழிக்கப் போவதாகக் கூறி தற்போது சென்னை வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது செல்ஃபி ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு, என் இதயம் தான் என்னிடம் மிகவும் அழகானது என்று என் வருங்கால கணவர் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மீரா மிதுன் விரைவில் மறுமணம் செய்யக்கூடும் என்று பேச்சு கிளம்பிய நிலையில் அவரே தனது வருங்கால கணவர் பற்றி ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீரா மிதுனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

செம அக்கா. உங்களின் வருங்கால கணவர் கொடுத்து வைத்தவர். அவர் சொல்வது போன்றே உங்களுக்கு ரொம்ப அழகான மனசு. எப்பொழுதும் இப்படியே இருங்கள். அடுத்தவர்கள் பேசுவதை பார்த்து மனம் மாறிவிட வேண்டாம். உங்களால் ஊழலை ஒழிக்க முடியும் என்று உசுப்பேற்றிவிட்டுள்ளனர்.

நெட்டிசன்களோ, இதயம் தானே அழகாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அப்படி இருக்கும்போது எப்பொழுது பார்த்தாலும் முன்னழகில் பெரும் பகுதி தெரியும்படி புகைப்படம் வெளியிடுவது ஏன்?. ஆடை குறைப்பில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அது தான் ஆயுள் முழுக்க உதவும். அழகும், கவர்ச்சியும் கெரியரில் முன்னேற உதவாது. உங்களின் கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பவர்கள் யாரும் நல்ல படங்களில் நடிக்க வைக்க மாட்டார்கள். வருங்கால கணவரா, அது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!