இனி எனக்கு விடிவு காலம்தான் – வடிவேலு

சென்னையில் நடைபெற்ற `கமல் 60’ நிகழ்ச்சி கலந்துக் கொண்ட நடிகர் வடிவேலு இனி எனக்கு விடிவு காலம்தான் என்று கூறியிருக்கிறார்.

கமல்ஹாசனின் 60 ஆண்டுக்கால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக `உங்கள் நான்’ என்னும் `கமல் 60’ நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், பிரபு, வடிவேலு, விஜய்சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபு என திரையுலக நட்சத்திரங்கள் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

வடிவேலு பேசும் போது, ‘கமலின் அடுத்த படமான ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் நான் நடிப்பது உறுதி, ‘இனி எனக்கு விடிவு காலம்தான்..’ என்று தெரிவித்தார். ‘இந்தியன்-2 படத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வந்தது. சில காரணங்களால் நடிக்க முடியவில்லை’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!