ஜோதிகாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்

ஜோதிகா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அவருடன் இணைந்து நடிக்க பிரபல நடிகர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

ஜோதிகா திருமணத்துக்கு பிறகு 36 வயதினிலே, காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் என்று வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.

தற்போது கார்த்தியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். அடுத்து பொன்மகள் வந்தாள் என்ற படமும் ஜோதிகா கைவசம் உள்ளது. இதில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். ஜே.ஜே.பிரட்ரிக் இயக்குகிறார். இந்த படத்துக்கு பிறகு கத்துகுட்டி படத்தை எடுத்து பிரபலமான இரா.சரவணன் இயக்கும் படத்தில் ஜோதிகா நடிப்பது உறுதியாகி உள்ளது.

இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிக்கிறார். சசிகுமார் அண்ணனாகவும், ஜோதிகா தங்கையாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. சமுத்திரக்கனி, சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இதர நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!