கவினுக்கு லிஃப்ட்டில் திடீர்னு தோன்றிய தத்துவம்: என்னன்னு தெரியுமா?

பிக் பாஸ் பிரபலம் கவின் தனக்கு தோன்றிய தத்துவத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்த போதிலும் கவினுக்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் தான் பெயரும், புகழும் கிடைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ட்விட்டரில் கவின் ஆர்மி இன்னும் ஆக்டிவாக உள்ளதது.

கவின் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு சில மணிநேரத்தில் லட்சக் கணக்கில் லைக்ஸ் கிடைக்கிறது. கையில் இருந்த புகைப்படம் எல்லாம் தீர்ந்து போய்விட்டது என்று போஸ்ட் போட்ட கவின் லிஃப்ட்டில் செல்லும்போது திடீர் என்று ஒரு தத்துவம் தோன்ற உடனே செல்ஃபி எடுத்து அது குறித்து இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

சேரும் இடம் அல்ல மாறாக பயணம் தான் முக்கியம் என்பது தான் லிஃப்ட்டில் போகும் போது கவினுக்கு தோன்றியதாம். கவினின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்களோ,

அண்ணா, லோஸ்லியாவும் நீங்களும் பிரிந்தது உண்மை தானா?. அதனால் தான் சிங்கிளாக புகைப்படம் வெளியிடுகிறீர்களா?. உங்கள் காதல் முறிவுக்கு காரணம் சேரப்பாவா, லோஸ்லியா அப்பாவா இல்லை பிக் பாஸா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் படம் குறித்த அப்டேட் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கவினின் போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள் கூறியிருப்பதாவது,

அடேங்கப்பா என்ன ஒரு தத்துவம். தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில் எழுதி வைத்துவிட்டு அதன் பக்கத்திலேயே அமர்ந்து கொள்ளவும் என்று கிண்டல் செய்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கையோடு கவின் புதுப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அது குறித்து மட்டும் எதுவும் போஸ்ட் போடுவது இல்லை. அதனால் தான் ரசிகர்கள் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!