சனம் ஷெட்டி சொன்னது தான் சரி: தர்ஷன் மனுஷனே இல்லை- மதுமிதா மறைமுக தாக்கு

சனம் ஷெட்டி தர்ஷன் பற்றி தன்னிடம் கூறியதை மதுமிதா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நியாயம் கேட்கும் மதுமிதா

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது நடிகை மதுமிதா தனது கையை கிழித்துக் கொண்டார். அதனால் வெளியேற்றப்பட்ட அவரை பிக் பாஸ் கொண்டாட்டத்திற்கு கூட அழைக்கவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து மதுமிதா தொடர்ந்து பேட்டிகள் அளித்து சக போட்டியாளர்கள் உள்பட பலரையும் விளாசிக் கொண்டிருக்கிறார். தனக்கு நடந்த கொடுமைக்கு கமல் ஹாஸன் நியாயம் கேட்க வேண்டும் என்று மதுமிதா கூறினார்.

சனம் ஷெட்டி ஆறுதல்
தர்ஷனின் முன்னாள் காதலி பற்றி மதுமிதா பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்த பிறகு சேரனை தவிர யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. யாரும் ஒரு போன் கூட பண்ணவில்லை. தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி தான் எனக்கு போன் செய்து நலம் விசாரித்தார் என்றார்.

தர்ஷன் பற்றி சனம்
நீங்கள் கையை அறுத்துக் கொண்டதை பார்த்தும் தர்ஷன் உங்களுக்கு முதலுதவி செய்ய வரவில்லையா என்று சனம் கேட்டார். இல்லை தர்ஷன் எனக்கு உதவவில்லை என்று நான் கூறியதை கேட்டு சனம் ஷெட்டி அதிர்ச்சி அடைந்தார். நிகழ்ச்சி முடிந்து தர்ஷன் வெளியே வந்த பிறகு அவர் உங்களை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி அவர் செய்யாவிட்டால் மனுஷனே இல்லை என்றார் சனம் என மதுமிதா கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்காத தர்ஷன்
தர்ஷன் இதுவரை என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்று மது தெரிவித்துள்ளார். தர்ஷன் மனுஷனே இல்லை என்று சனம் ஷெட்டி கூறியது மிகவும் சரி என்பது போன்று பேசியுள்ளார் மதுமிதா. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தர்ஷனும், சனம் ஷெட்டியும் பிரிந்துவிட்டனர் போன்று. காதல் முறிவு குறித்து சனம் இன்ஸ்டாகிராமில் சூசமாக போஸ்ட் போட்டுக் கொண்டே இருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!