தர்ஷனை பிரிந்த கவலையை மறைக்க ‘இப்படி’ செய்கிறீர்களா சனம்?

நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காதல் முறிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிக் பாஸ் 3 பிரபலம் தர்ஷனும், நடிகை சனம் ஷெட்டியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் தனக்கும், தர்ஷனுக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டது போன்று சனம் இன்ஸ்டாகிராமில் போஸ்ட்டுகள் போட்டார். சனம் ஷெட்டியின் போஸ்ட்டுகளை பார்த்தவர்கள் தர்ஷனுக்கும், ஷெரினுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் தான் பிரச்சனைக்கு காரணமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிக் பாஸ் காதல்
பிக் பாஸ் ஸ்க்ரிப்டுக்காக உருவாக்கிய காதல் கதை நிஜமாகிவிட்டதோ என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். காதல் முறிவு குறித்து தர்ஷன் இதுவரை வாய் திறக்கவே இல்லை. அவர் தன் வேலைகளில் பிசியாக உள்ளார். ஆனால் சனம் தொடர்ந்து சூசகமாக போஸ்ட்டுகள் போடுகிறார். இந்நிலையில் சனம் நிறைய மேக்கப் போட்டு அழகான உடை அணிந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

சனம் ஷெட்டி கவலை
சனம் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, தர்ஷனை பிரிந்த கவலையால் நிறைய அழுகிறீர்களோ?. அதை மறைக்கத் தான் இவ்வளவு மேக்கப் போட்டிருக்கிறீர்களா?. நீங்கள் என்ன தான் மேக்கப் போட்டாலும் முகத்தில் கவலை தெரிகிறது. கண்கள் வீங்கியுள்ளன. முடிந்ததை நினைத்து வருத்தப் பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

நெட்டிசன்கள் விளாசல்
சனம் ஊதா கலரு உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை பார்த்தவர்கள், எத்தனை செல்ஃபி?. வல்லவன் படத்தில் வரும் ரீமா சென் குணமா உங்களுக்கு?. தயவு செய்து இது போன்று புகைப்படம் வெளியிடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பிக் பாஸ் கொண்டாட்டத்தின்போது ஷெரினை தர்ஷனை தூக்க வைத்தது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போன்றாகிவிட்டது. பிக் பாஸ் சனம் ஷெட்டியின் வாழ்க்கையில் கேம் ஆடிவிட்டார் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!