அஜித் ஒரு பவர்புல் மனிதர்..!!! இப்படி சொன்னது யார் தெரியுமா..?


அஜித் எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் திரைப்படத்துறையில் கால் பதித்து தனது அயராது கடின உழைப்பால் முன்னேறி தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை தனது வித்தியாசமான நடிப்பால் உருவாக்கி, அனைத்து ரசிகர்களின் மனதில் தல என்று நிலைத்து இருக்கிறார்.

அஜித் எப்பொழுதும் ஒரு செயலை செய்தால் அவருடைய கவனம் சிதறாது அதேபோல் தான் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித். தல வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே கொடுப்பார் ஆனால் அந்த வருடம் முழுவதும் அந்த படத்தை பற்றி பேசும்படி அமையும், அதற்கு காரணம் அவரது அயராது கடின உழைப்பு.

இந்த முறை என்னமோ சீக்கிரமே அவரின் அடுத்த படம் பற்றிய தகவல் சீக்கிரம் வெளியானது. ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் அஜித்தின் அடுத்த படத்தின் டைட்டில் விசுவாசம் என்று அறிவித்தனர். இதை யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அனைவரும் ஆச்சிரியத்தில் மூழ்கினர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!


தல அஜித்துடன் நடிக்க திரை பிரபலங்கள் நான் நீ என போட்டிபோடுவார்கள். அவருடன் நடிக்க சினிமாவில் இருப்பவர்களுக்கு யாருக்குத்தான் ஆசை இல்லை.

சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் தீரன் அதிகாரம் ஓன்று இந்த படத்தின் மூலம் கொடூர வில்லனாக நடித்து அனைவரையும் தன் பக்கம் கவனத்தை ஈர்த்தவர் அபிமன்யூ சிங்.

தீரன் அதிகாரம் ஓன்று மாபெரும் ஹிட்டானதால் இவருக்கு பல படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்துகொண்டு இருக்கிறது.

ஆனால் இவர் சமீபத்தில் அஜித் பற்றி பேசினார் அப்பொழுது அவர் நடிப்பில் பாயும் புலி போன்று பவர்புல் ஆனவர் என்று கூறினார் மேலும் அவரது நடிப்பு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அஜித் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதைவிட பெரிய மகிழ்ச்சி எனக்கு எதுவும் கிடையாது என அபி கூறினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!