மீண்டும் வருவான்: கைதி 2 படம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ் கைதி 2 படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ்இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி படம் நேற்று தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியானது.

படத்தை பார்த்த அனைவருமே பாசிட்டிவான கருத்துகளைக் கூறுகின்றனர். அதனால் கண்டிப்பாகக் கைதி படம் வசூலில் வாரிக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கார்த்தி தனது நடிப்பால் மிரட்டியிருப்பது அவரை அடுத்த கட்டத்துக்குக் கூட்டிச் சென்றுள்ளது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் ஆதரவை அடுத்து, ‘கைதி 2’ படத்தை எதிர்பார்க்கலாமா என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேள்வி கேட்டு வந்தனர்.

தற்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக பற்றிய லோகேஷ் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘கைதி படத்தை ஆதரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. கைதி செட்டில் இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய பிரபு மற்றும் கார்த்திக்கு நன்றி… டில்லி மீண்டும் வருவார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதன் முலம் கைதி 2 படம் உருவாகவுள்ளது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

இது தவிர இன்று கைதி படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கார்த்தி கைதி 2 படத்தை உறுதி செய்துளளர். மேலும் கைதி 2 படத்திற்காக லோகேஷ் தன்னிடம் 30 நாள் கால்ஷீட் கேட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 64 படத்தில் பிஸியாக இருப்பதால் அதை முடித்த பின்பு கைதி 2 ஷூட்டிங்கில் இறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கேட்ட கார்த்தி ரசிகர்கள் மரண வைட்டிங் என்று ட்விட்டரில் கூறி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!