சாகடிக்காதப்பா: விக்ரமை பார்த்து பொசுக்குன்னு சொன்ன த்ருவ்

சாகடிக்காதப்பா என்று த்ருவ் தனது அப்பா விக்ரமிடம் தெரிவித்துள்ளார்.

த்ருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

மேடையில் விக்ரம் பேசியதை பார்த்து அசந்து போகாதவர்களே இல்லை எனலாம். அவர் பேசியதை கேட்டவர்கள், மனிதர் என்னமா பேசுறார் என்று நெகிழ்ந்தார்கள். அந்த அளவுக்கு இனிமையாக பேசினார். தன்னை விட தன் மகன் த்ருவ் பல விஷயங்களில் சிறப்பானவர் என்றார் விக்ரம்.

அதிலும் குறிப்பாக தன்னை விட த்ருவுக்கு நினைவாற்றல் அதிகம் என்றார். ஆதித்ய வர்மாவாகவே த்ருவ் மாறிவிட்டதாகவும் கூறினார். மேலும் மேடையில் தன் அருகில் நின்ற த்ருவிடம் ஆதித்ய வர்மா படத்தில் வரும் ஒரு வசனத்தை பேசச் சொன்னார். முதலில் தயங்கிய த்ருவ் பின்னர் பேசினார்.

இதையடுத்து ஏய், அந்த துளு வசனத்தை பேசுடா என்று கூற த்ருவோ சாகடிக்காதப்பா என்று கொஞ்சினார். அப்பாவும், மகனும் சேர்ந்து மேடையில் செய்த சேட்டைகள் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆதித்ய வர்மா படத்தில் விக்ரமும் இருக்கிறார்.

ஆமாம், த்ருவுக்கு ஆதரவாக உள்ளார், அது தான் தெரியுமே என்று கூறுகிறீர்களா?. அதை சொல்லவில்லை, படத்தில் விக்ரமின் கை மட்டும் தெரியும்படி காட்சி உள்ளது. இதை அவரே மேடையில் தெரிவித்தார்.

அர்ஜுன் ரெட்டி படத்தை ஏற்கனவே இந்தியில் கபிர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்து வெற்றியும் கண்டுவிட்டனர். இந்நிலையில் தான் அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மா அடுத்த மாதம் 8ம் தேதி ரிலீஸாகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!