இப்படியுமா போஸ் கொடுப்பது..? கேலி செய்த நெட்டிசன்கள்..!!


டிவிட்டரில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி, சமீபத்தில் தஞ்சாவூர் நடராஜன் கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கு எடுத்த சில புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தார். அதில் ஒரு புகைப்படத்தில், ஒரு நபர் கீழே அமர்ந்து ஹாயாக சிறுநீர் கழிப்பது பதிவாகியிருந்தது.

இதைக் கண்ட நெட்டிசன்கள், இதை தவிர்த்து நீங்கள் புகைப்படம் எடுத்திருக்கலாம் என அறிவுரை கூறத் தொடங்கிவிட்டனர். சிலபேர் தூய்மை இந்தியா அப்படித்தான் இருக்கும் என கிண்டலத்தனர்.

அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, நான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும். அவர் ஹைதராபாத்தில் இருந்து வந்த ஐயப்பசாமி. என்னுடன் புகைப்படமெல்லாம் எடுத்தார். பொது இடத்தில் இப்படி அசிங்கம் பண்றவங்கள.. என சற்று கோபமாக டிவிட் செய்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!