நீயா நானா கோபிநாத், இது எல்லாத்துக்கும் மேல படம் மூலம் ஹீரோவாக களமிறங்கவுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா என்ற ஷோ மூலம் பிரபலமானவர் கோபிநாத். ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் தொடரே அது.
கிட்ட தட்ட 1000 எபிசோடு தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. சில பேருக்கு கோபிநாத் என்று சொன்னால் தெரியாது. இதுவே நீயா நானா கோபிநாத் என்றால் சட்டென்று ஞாபகத்திற்கு வந்துவிடும். இந்த ஷோ மூலம் இவர் நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தொலைக்காட்சியில் பார்த்து வந்த கோபிநாத்தை, அவரது ரசிகர்கள் திரையில் காணலாம். ஆம்… தொகுப்பாளராக இருந்த இவர் தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக களமிறங்கவுள்ளார். இது எல்லாத்துக்கும் மேல என்று பெயரிட்டுள்ள இந்த படத்தை பாரதி கணேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தமிழில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான கண்ணுபட போகுதய்யா படத்தையும் யுத்தம் என்ற தெலுங்கு படத்தையும் இயக்கி உள்ளார்.
இதில் கோபிநாத்துடன் இணைந்து சதீஷ், அக்ஸிதா, ராகுல், ஷோபன், மவுரியா, ஆதித்யா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த கால சூழ்நிலைகளில் பல பெற்றோர்கள் வேலை நெருக்கடி காரணத்தால், தங்களது பிள்ளைகளைக் கவனிப்பது குறைந்து தவறான பாதைக்குச் சென்று விடுகின்றனர். இந்த சூழ்நிலையில், பிள்ளைகளை நல்லவர்களா, வளர்க்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் இப்படம் ஆமையுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நிமிர்ந்து நில் படத்தில் கோபிநாத் சிறிய வேடத்தில் நடித்து இருந்தாலும், அது நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இது எல்லாத்தும் மேல படம் கோபிநாத் கேரியரில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!