‘என்ன பிக்பாஸ் வீட்டு’ல நிறையப் பேர் விரும்பினார்கள்’: புதிய சர்ச்சையைக் கிளப்பிய மீரா மிதுன்!

பிக் பாஸ் 3 வீட்டில் தன்னை நிறைய பேர் விரும்பியதாக மீரா மிதுன் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கடைசி ஆளாக உள்ளே சென்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியவர் மீரா மிதுன். சேரன் மீது அவதூறு பழி செலுத்தி மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்தார்.

அது மட்டுமின்றி ஜோ மைக்கேலைக் கொலை செய்ய ரகசியமாகத் திட்டம் திட்டிய அந்த ஆடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கினார். பின்பு முகெனும், தானும் ஒன்றாக இருக்கும் படி வீடியோ தயார் செய்து இணையதளத்தில் பரப்பும்படி பேசி ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நான் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே சென்றவுடன் அவர்களுக்கு எப்படி வெளியே ஆடியோ லீக்கான விஷயம் தெரிந்தது என்று தெரியவில்லை. ஒரு வேலை அவர்கள் தான் செய்தார்கள் போல? நானும், முகெனும் சேர்ந்து இருக்கும் விடியோ சர்ச்சையை யார் பண்ண என்று தெரியவில்லை.

முகென் பெயரை சொல்லி நான் எதற்காக பப்லிசிட்டி பெற வேண்டும். மலேசியாவில் வேண்டுமானால் முகெனை தெரிந்திருக்கலாம். தமிழகத்தில் அவரை யாருக்கும் தெரியாது. நான் மிஸ் சவுத் இந்தியா என்பது எத்தனை பேருக்கு தெரியும் என எனக்கு தெரியவில்லை. மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டதாக ரூமர் வெளியான பிறகு தான் என்னை பலருக்குத் தெரிய வந்தது.

தர்ஷனை என் அம்மாவிடம் போய் பேசு என்று டிவி சேனலில் தைரியமாகச் சொன்ன ஆள் நான், அந்தளவுக்கு போல்டானவள். என்னுடைய பர்சனல் லைப்பில் சிலர் விளையாடுவது எனக்கு சரியாகப் படவில்லை. முகெனை வைத்துப் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

பிக் பாஸ் வீட்டில் நிறைய பேரு என்ன விரும்புனாங்க. யார் யாரென்று நான் சொல்ல விரும்பல. ஆனால் அவங்களுக்கு தைரியம் இல்ல. இதெல்லாம் பேச கூடாது. பிக் பாஸ் வீட்ல என்னென்ன நடந்துச்சின்னு சொல்லியிருந்தால் முகின் டைட்டில் வின் பண்ணியிருக்க மாட்டார். முகின் ஓடிங்குக்கு ஏதாவது பிரச்சனை வரும் என்று தான் நான் அமைதியாக இருந்தேன். முகென் பெயரை கெடுக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு கிடையாது. அவர் மேல எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல’ என்று பேசியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!