மீண்டும் சர்ச்சை கதையை தேர்வு செய்த அமலா பால்!

ஆடை படத்தை தொடர்ந்து அமலா பால் மீண்டும் சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அமலா பால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஆடை. ட்ரெய்லர் வெளியான பிறகு நிர்வாணமாக நடித்துத்திருந்த அமலா பால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆனால் படம் வெளியான பிறகு ஆபாசம் ஏதும் இல்லாமல் காட்டப்பட்டிருந்தால், அமலா பால் மீது இருந்த விமர்சனம் குறைந்தது. இந்த நிலையில் அமலா பால் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய படத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளார்.

பெண்களுக்குக் காமத்தின் மீது ஏற்படும் உணர்ச்சியைச் சொல்லும் விதமாகக் கடந்த ஆண்டு லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்தியில் வெளியான இதில் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அதில் கியாரா அத்வானி பெற்றோர் முன்பு சுய இன்ப காட்சியில் நடித்திருந்தது, கலாச்சாரத்தைச் சீரழிக்கும் விதமாக உள்ளது என்று கடும் விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் இதையெல்லாம் தாண்டி இந்திய அளவில் அதிக பேரால் பார்க்கப்பட்ட வெப்சீரிஸ் எனும் பெருமையை லஸ்ட் ஸ்டோரிஸ் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தை தெலுங்கில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். நான்கு கதைகள் கொண்ட இந்த படத்தை நான்கு வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இதில் கியாரா அத்வானி நடித்த கதாபாத்திரத்தில் தான் அமலா பால் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதை ஓ பேபி திரைப்படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இயக்கவுள்ளார்.

ஏற்கனவே ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சி கொடுத்த அமலா பால், தற்போது மீண்டும் முரண்பாடுகள் தொடர்பான கதையை தேர்வு செய்தது, ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத்தருமா அல்லது இந்தியை போன்றே விமர்சனங்களை பெற்றுத்தருமா என்பதை பொருத்துத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!