அரசியலுக்கு வரவேண்டாம்- ரஜினிக்கு அமிதாப் பச்சன் அறிவுரை

அரசியலுக்கு வரவேண்டாம் என ரஜினிகாந்துக்கு அறிவுரை கூறியதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் ’சைரா நரசிம்மா ரெட்டி’. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார். அவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் கலந்து கொண்டு பேசும்போது, சிரஞ்சீவியை அரசியலுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தினேன். அதை அவர் கேட்கவில்லை. இதே அறிவுரையை ரஜினிகாந்துக்கும் சொன்னேன் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!