மூன்று பேரின் காலில் விழுந்த விஜய்யின் தந்தை!

உலகளவில் மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்தாலும், தமிழில் இப்படியான முயற்சிகள் எப்போதாவதுதான் நிகழ்கின்றன. அப்படியானதொரு பரீட்சார்த்த சினிமாதான் ஆர். பார்த்திபனின் ஒத்த செருப்புபார்த்திபன் என்ற ஒரே ஒரு நபரின் கடின முயற்சியால் உருவானஒத்த செருப்புதிரைப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் கலந்துக்கொண்டு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

என் வாழ்நாளில் இதுவரை படம் பார்த்துவிட்டு மூன்று பேர்களின் காலில் மட்டும் விழுந்துள்ளேன்.ஒருவர்சங்கராபரணஇயக்குனர் கே விஸ்வநாத், இரண்டாமவர்,அரங்கேற்றம்இயக்குநர் கே பாலச்சந்தர், மூன்றாமவர் புதிய வார்ப்புகள் இயக்குநர் பாக்யராஜ்.இந்த மூவரை அடுத்து தற்போது பார்த்திபனுக்கு எனது மரியாதையை அளித்துள்ளேன் ஒத்த செருப்பு படத்தில் ஒரே ஒரு கேரக்டர் இரண்டு மணி நேரம் என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. மேக்கப் போடாத இந்த முகத்தை இரண்டு மணி நேரம் பார்க்க வைத்தது மட்டுமன்றி ரசிக்கவும் வைத்துவிட்டார். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அவரது கடின முயற்சி ஒன்றே காரணமாகும் என்று இயக்குனர் சந்திரசேகர் அவர்கள் தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!