விஜய் மேடையில் பேசியதை கேட்டு விஜய் சேதுபதி சொன்ன எட்வைஸ் இதோ!

பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் இந்த படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகளை பற்றி நீண்ட நேரம் பேசினார். நயன்தாரா ஆரம்பித்து சிறு வேடங்களில் நடித்த தேவதர்ஷினி வரை அனைவரையும் பாராட்டி பேசினார்.

நடிகர் சௌந்தரராஜன் பற்றி பேசிய விஜய், “இந்த படத்தில் ஒரு நல்ல நண்பரை சந்தித்தேன். சௌந்தர பாண்டியன். அவர் அடிக்கடி மண்ணுக்கும் மக்களுக்கும் எதாவது பண்ணணும்னே அடிக்கடி சொல்வார். பிரென்ட்ஷிப்காக உயிரை கூட கொடுக்கும் அளவுக்கு ஒரு நல்ல நண்பரை சந்தித்ததில் சந்தோசம்” என கூறினார்.

இதை கேட்டுவிட்டு நடிகர் விஜய் சேதுபதி நடிகர் சௌந்தர்ராஜனுக்கு கால் செய்து பேசியுள்ளார். “விஜய்யே உன்னை பற்றி பெரிய பெரிய வார்த்தைகள் கூறியுள்ளார். உன்னைப்பற்றி எனக்கு தெரியும். விஜய் சார் சொன்னது பெரிய விஷயம். பார்த்து நடந்துக்கோ.. மிஸ்யூஸ் பண்ணிடாத” என கூறினாராம். இதை சௌந்தரராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!