பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தபின்னரும் அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் தனது கருத்துக்களை டுவிட்டரிலும் பேட்டியிலும் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் கஸ்தூரி என்பது தெரிந்ததே. பிக்பாஸ் வரலாற்றில் சீக்ரெட் அறை வசதியை வேண்டாம் என மறுத்தவரும் கஸ்தூரிதான்.
இந்த நிலையில் இன்று டுவிட்டரில் ஒருவர் கஸ்தூரியை பங்கமாய் கலாய்த்து ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தபோது ‘லவ் பர்ட்ஸ்’ பாட்டை அடிக்கடி பாடுவார். இதுகுறித்து ஒரு டுவிட்டர் பயனாளி ஒருவர் கிண்டலடித்ததோடு, கஸ்தூரியை ‘காக்கா’ என்றும் கலாயத்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள கஸ்தூரி, ‘அந்த பாட்டை பாடினதே கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் தான். கேமிராவுக்கு முன்னாடி பாட்டு என்னுது, பின்னாடி விளையாட்டு அவங்ளுது’ என்று கூறினார்.
Paadinathe kavinaiyum losliyavaiyum paathuthaanda "ka " paiyaa. cameravukku munaadi paattu ennuthu pinnaadi vilaiyaatu avangaluthu.
Naan Kaakaa nu solravanga yaarunnu paarthaa, ada, all nobel prize winners, hollywood heroes, uzhaippaaligal, uththamargal.#K_Boys https://t.co/geSZllecWO
— Kasturi Shankar (@KasthuriShankar) September 9, 2019
மேலும் தன்னை ‘காக்கா’ என கூறிய ரசிகருக்கு, ‘நான் காக்கான்னு சொல்றவங்க யாருன்னு பார்த்தா, அடா, ஆல் நோபல் பரிசு வாங்குனவங்க, ஹாலிவுட் ஹீரோக்கள், உழைப்பாளிகள், உத்தர்கள் என கலாயத்துள்ளார்’. கஸ்தூரியின் இந்த டுவீட் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.