இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இந்த பிரபலம்தான்?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கவின், முகின், லாஸ்லியா, ஷெரின் மற்றும் சேரன் ஆகிய 5 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். எனவே எவிக்சன் பட்டியலில் உள்ள இந்த ஐந்து பேர்களில் கவின், முகின், லாஸ்லியா ஆகிய மூவரும் அதிக வாக்குகள் பெற்று எவிக்சனில் இருந்து தப்பித்து உள்ளதாக தெரிகிறது.

மேலும் ஷெரின் மற்றும் சேரன் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட சம அளவில் வாக்குகள் பெற்று உள்ளதால் இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் வனிதாவுடன் ஷெரின் மோதும் இன்றைய புரமோ காட்சிகளால் ஷெரினுக்கு அனுதாப ஓட்டுகள் அதிகம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இன்று காலை வரை சேரனை விட ஷெரின் குறைவான வாக்குகள் பெற்ற நிலையில் இன்று வெளியான இரண்டு புரமோ வீடியோக்களை அடுத்து விழுந்த அனுதாப வாக்குகளால் சற்றுமுன் நிலவரப்படி சேரனை விட ஷெரின் சற்று அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக தெரிகிறது

மேலும் இன்றைய நிகழ்ச்சி முடிவுக்குப் பின்னர் ஷெரினுக்கு இன்னும் அதிகமான அனுதாப ஓட்டுக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஷெரின் இந்த வாரம் காப்பாற்றப்படுவார் என்றே தெரிகிறது. வனிதா-ஷெரின் மோதல் திட்டமிட்ட நாடகமா? அல்லது இயல்பாக நடந்ததா? என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த சண்டையால் ஷெரின் காப்பாற்றப்படுகிறார் என்பதும் ஷெரினுக்கு ஆறுதல் கூறிய சேரன் வெளியேற்றப்படுகிறார் என்பதும் தான் இன்றைய நிகழ்ச்சியின் டுவிஸ்ட் ஆகும்


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.