சினிமா விழாவிற்கு கவர்ச்சியான உடையில் வந்த நடிகை யாஷிகா ஆனந்த் – புகைப்படம் உள்ளே!

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றிபெற்றது இந்த திரைப்படம். இதைத்தொடர்ந்து கவுதம் கார்த்தி நடிப்பில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது யாஷிகாவிற்கு.

இதில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாஷிகா. இதை பார்த்த பலரும் யாஷிகாவிற்கு ரசிகர்கள் ஆனார்கள். அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்ட யாஷிகா நடிகர் மஹத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். அதன் பின் பிக் பாஸ் இருந்து வெளியேறிய யாசிக்க தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜாம்பி பட இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த நடிகை யாஷிகா மிகவும் கவர்ச்சியான உடையில் வந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.