என்னை பார்த்தா உனக்கு எதுவும் பண்ண தோனலயா முகென்.. வெளியாகும் அபிராமி பேசிய காதல் வசனங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி முகெனிடம் பேசிய காமம் கலந்த வார்த்தைகள் எல்லாம் நேற்றுதான் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 24 மணி நேரத்தில் கவின் மீது காதல் கொண்டார். கவின் அபிராமியின் காதலை ஏற்க மறுத்து விட்டார்.

இதனால் முகெனிடம் நெருக்கமானார் அபிராமி. நாளடைவில் முகெனையும் காதலிக்க தொடங்கிய அபிராமி, அவரிடமும் தனது காதலை சொன்னார்.

ஆனால் தனக்கு வெளியில் ஒரு வாழ்க்கை இருப்பதாக கூறிய முகென், அபிராமியின் காதலை ஏற்கவில்லை. நல்ல நண்பர்களாக இருப்போம் என கூறி வந்தார்.

ஆனாலும் நான் காதலிக்கிறேன், எப்போவும் காதலித்துக்கொண்டே இருப்பேன், காதலிப்பேன் என்று கூறினார். கமல் கேட்ட போதும் இதையேதான் கூறினார்.

ஆனால் பிக்பாஸ் ஹோட்டலுக்கு விருந்தாளியாக வந்த வனிதா, அபிராமியை நீதான் முகென் பின்னாடி அலைகிறாய், நீ ஜீரோவாகிவிட்டாய், அவன் ஹீரோவாகிவிட்டான் என்று இஷ்டத்துக்கு அள்ளிவிட்டார்.

இதையெல்லாம் கேட்டு உக்கிரமான அபிராமி, முகெனுடனான காதலை முறித்துக்கொள்ள காத்திருந்தார். அதற்கேற்றார் போல் நேற்றைய எபிசோடில் பல வழிகளை ஏற்படுத்திக் கொடுத்த வனிதா, நன்றாக கொளுத்தி போட்டு குளிர்காய்ந்தார்.

இதனால் மொத்த குடும்பமும் முகென் மீதுதான் தவறு என பேசியது. அபிராமி காதல் என்று நெருங்கி வந்த போது முகென் ஏன் விலகவில்லை என்ற பிரதான கேள்வியை முன்வைத்தனர்.

அப்போது சாண்டி, கவின், தர்ஷன் ஆகியோர் மட்டுமே முகெனுக்கு ஆதரவாக இருந்தனர். அவர்கள்தான் முகென் பல முறை கூறினான், ஆனால் அபிராமிதான் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை நான் காதலிப்பேன் என்று கூறினாள் என்றனர்.

மேலும் என்னை பார்த்தால் உனக்கு எதுவும் தோனலயா என்றும் அபிராமி முகெனிடம் அந்த அர்த்தத்தில் கேட்டிருக்கிறார் என்றும் அபிராமியின் காம வசனங்களை அள்ளிவிட்டார் தர்ஷன். இப்படி முகெனின் உணர்வுகளை தூண்டும் வகையிலேயே பேசியிருக்கிறார் அபிராமி.

ஏற்கனவே இளைஞர் ஒருவருடன் அபிராமி கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்று இருக்கும் நெருக்கமான போட்டோக்கள் வைரலானது. அதுமட்டுமின்றி காதலுக்காக தனது தாயை பிரிந்து நான்கு மாதங்கள் தனது பாய் ஃபிரன்டுடன் தங்கியிருந்ததாகவும் அவர் ஏமாற்றிவிட்டதாகவும் கூறினார் அபி.

அபியின் கேரக்டரை தவறாக கூறி அவருடன் பழகிய பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் முகெனிடம் அபிராமி பேசியதாக வெளியாகும் பேச்சுகள் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.