கன்னத்தில் “பளார்” விட்ட சேரன் மனைவி? நடந்தது என்ன?

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மற்ற சீசன்களை விட மிக விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்தில் இருந்தே பல பிரச்சனைகள், சண்டைகள் சச்சரவுகள் என நிகழ்ச்சி அனல் பறந்து வருகிறது.

இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவதாக நடிகை வனிதா விஜயகுமார் வெளியேறினார். அவர் வெளியேறிய பின்பு பிக்பாஸ் வீட்டில் கன்டென்ட் கொடுக்கவே ஆட்கள் இருக்க மாட்டார்கள் என இருந்த சூழ்நிலையில் அந்த இடத்தை மீரா பிடித்தார்.

வனிதா வீட்டை விட்டு சென்றாலும், சாக்ஷி, மீரா, கவின் ஆகியோர் கன்டென்ட்களை அள்ளித்தெளித்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தான் மாடல் அழகி மீரா மிதுன், இயக்குநர் சேரன் மீது அபாண்டமாக பழி ஒன்றை போட்டார். வீட்டிற்குள் ஹவுஸ் மேட்ஸ் நடத்திய டாஸ்க் ஒன்றில் லோஸ்லியாவை பிடிப்பதற்காக அனைத்து ஹவுஸ்மேட்களும் ஓட சேரனும் துரத்தினார்.

அப்பொழுது லோஸ்லியாவை பிடிக்கும் போது சேரன் தனது இடது கையால் மீராவை தள்ளிவிட்டார். அப்பொழுது அதை சாதாரணமாக எடுத்துக்கொண்ட மீரா, பின்னர் ஹவுஸ் மேட்ஸ் முன்னிலையில் தன்னை சேரன் இவ்வாறு செய்ததாக குற்றம்சாட்டினார் கூறினார்.

அவர் கூறியபோது “அவர் தொட்ட இடம் தவறு” என குறிப்பிட்டதால் அது சேரன் மீது போடப்பட்ட மிகப்பெரிய குற்றச்சாட்டாக பார்க்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டை வீட்டில் உள்ளவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதன் காரணமாக பலர் மீராவிற்கு எதிராக வாக்களித்தனர். இதனால் மீராவை கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். அப்பொழுது அவருக்கு நடந்த சம்பவத்தை குறும்படமாக போட்டுக்காட்டியும், அவர் தான் சொன்னது சரி தான் என்று வாதம் பிடித்தார்.

அதன் பின் வெளியே வந்து சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுதும் அவர் சொன்ன குற்றச்சாட்டு சரியான குற்றச்சாட்டு தான் என்பதில் உறுதியாக இருந்தார்.

இந்நிலையில் தற்போது இணையத்தில் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன் படி இயக்குநர் சேரனின் மனைவி செல்வராணி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா மிதுனை சந்தித்ததாகவும், அப்பொழுது மீரா மிதுனிற்கும் செல்வராணிக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நடந்ததாகவும், அதில் செல்வராணி, மீரா மிதுனை கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்த செய்தி வைரலாகி வருகிறது. ஆனால் உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்ததா? என்ற எந்த ஒரு தகவலும் இல்லை. சமூகவலைதளங்களில் வெளியான சில பதிவுகளை வைத்தே இந்த செய்தி வைரலாகி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.