TRP-யை ஏகிற வைக்க வருகிறார் சர்ச்சை நடிகை? அப்போ வனிதாவை விட்டதுக்கும் இது தான் காரணமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது சென்று கொண்டிருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தபடி வனிதா வெளியேற்றப்பட்டு விட்டார்.

இருப்பினும் வனிதா இல்லாத பிக் பாஸ் வீடு போர் ஆகி விடும், பெருசா சண்டை எதுவும் இருக்காது என ரசிகர்கள் வருத்தப்பட்டு வந்தனர். ஏன் அந்த வருத்தம் சேனலுக்கு இருந்திருக்க வாய்ப்புண்டு.

இதனால் வனிதாவின் இடத்தை நிரப்ப ஒருவரை டிவி சேனல் தேடி வருவதாகவும் மேலும் கவர்ச்சி நடிகை விசித்ராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவர் வைல் கார்டு என்ட்ரியில் உள்ளே அனுப்பட்டாலும் அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் விசித்ரா ஏற்கனவே ஒருமுறை அளித்த பேட்டியில் நான் பிக் பாஸ் வீட்டிற்கெல்லாம் செல்ல மாட்டேன். நான் நானாக இருக்க தான் எனக்கு பிடிக்கும்.

எல்லோர் முன்பும் தூக்கி எழுவது பல் துலக்குவது இதெல்லாம் எனக்கு விருப்பமில்லை என கூறி இருந்தார். இதனால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகமும் உள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.