கர்ப்பத்தையே கோலாகலமாக கொண்டாடிய சமீராவுக்கு, குழந்தை பிறந்துவிட்டது!! என்ன குழந்தை தெரியுமா?

கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் அப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் வெடி, வேட்டை, அசல் போன்ற ஒருசில படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அதன்பிறகு சரியான வாய்ப்புகள் அமையாததால் சமீரா 2014ஆம் ஆண்டு அக்ஷய என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் பிஸியானார்.

https://www.instagram.com/p/BzzyjWZH1uJ/

இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பாக இருந்தார் .மேலும் சமீபத்தில் கர்ப்பமாகியுள்ள நேரத்தில் நீருக்கு அடியில் பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

https://www.instagram.com/p/BzmpDU-nwFb/

இந்நிலையில் சமீராவுக்கு இன்று காலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனை சமீராவின் தாயார் மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்