வைஷ்ணவ சம்பிரதாயப்படி நடந்த சுதாரகுநாதன் மகள் மாளவிகா திருமணம்

பிரபல கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதன் மகள் மாளவிகாவுக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளையான மைக்கல் மர்பிக்கும் சென்னையில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.

கர்நாடக சங்கீத உலகில் புகழ்பெற்று விளங்குபவர் சுதா ரகுநாதன். இவரது மகள் மாளவிகா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மைக்கல் மர்பி என்ற கிறிஸ்தவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் புகைப்படங்களுடன் தகவல் வெளியானது.

இதனால் சுதா ரகுநாதனுக்கு பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவரது கச்சேரி இனிமேல் எங்கும் அரங்கேற விடக்கூடாது என சமூக வலைத்தளங்களில் இந்துத்துவ ஆதாரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இத்தகைய சூழலில், சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா மற்றும் மைக்கல் மர்பி ஆகியோரின் திருமணம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. வைணவ முறைப்படி நிகழ்ந்த இந்தத் திருமண வைபவத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் மட்டும் கலந்துக்கொண்டிருக்கின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.