முடிவுக்கு வந்தது சஞ்சீவ்-ஆல்யா மானசா வாழ்க்கை- ரசிகர்கள் அதிர்ச்சி

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு நாளுக்கு நாள் மவுசு கூடி கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக ராஜா ராணி, செம்பருத்தி, நாயகி என சில சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசா நாயகியாக நடிக்க சஞ்சீவ் நாயகனாக நடித்து வந்தார். தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளது.

சமீபத்தில் தான் இறுதி நாள் ஷூட்டிங் எல்லாம் முடிந்துள்ளது. இந்நிலையில் ஆலியா மானசா அளித்த பேட்டியில் இறுதி நாள் ஷூட்டிங்கிற்கு பிறகு அனைவரும் கண்ணீருடன் விடை பெற்றோம்.

திருமணத்திற்கு கண்டிப்பாகூப்பிடுங்க என அனைவரும் சொல்லி விட்டு சென்றார்கள்.

ராஜா ராணி சீரியல் தான் அழுகாச்சி சீரியல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தாக பலரும் கூறினார்கள். என்னுடைய வாழ்க்கையிலும் திரைப்பயணத்தில் ராஜா ராணி மறக்க முடியாத ஒன்று.

இந்த சீரியலால் தான் என் வாழ்க்கை துணையாக சஞ்சீவ் கிடைக்க போகிறார் என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இதே கூட்டணி, இதே இயக்குனர், இதே தயாரிப்பு நிறுவனம் என மீண்டும் ஒரு சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.