பீப் வார்த்தைகள் பேசிய ஆபிராமி! நெருக்கமாக இருந்த அபிராமி-சாக்ஷி இடையே திடீர் சண்டை?

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே நடிகை அபிராமி மற்றும் சாக்ஷி இருவரும் மிக நெருக்கமாக இருந்து வருகின்றனர்.

ஆனால் இன்று அவர்கள் இருவருக்கும் நடுவில் திடீரென சண்டை ஏற்பட்டுள்ளது. வனிதாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அபிராமி சில பீப் வார்த்தைகள் பேசினார்.

அதன்பிறகு அவர் சாக்ஷியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது “அடுத்த வாரம் என்னையும் நாமினேட் செய்து வெளியில் அனுப்பிவிடுவார்கள்” என ஆபிராம் கூறினார்.

இந்த வாரன் நாமினேஷ லிஸ்டில் இருக்கும் சாக்ஷி அகர்வால், “நான் இந்த வார லிஸ்டில் இருக்குறேன், என்னை பற்றி கவலையில்லை. அடுத்த வாரம் பற்றி சுயநலமாக யோசித்து கொண்டிருக்க” என கூறி டென்ஸனாக பேசினார். உன் பிரச்னையை நீ தான் பாத்துக்கணும் என்று அபிராமி கூறிவிட்டார்.

அவர்கள் இருவருக்கும் நடுவில் இடைவெளி இதனால் அதிகமாகிவிட, வரும் நாட்களில் இருவருக்கும் நடுவில் சண்டை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.