எதுக்கு 2ஆவது திருமணம் செய்து வைத்தேன்? சரவணனின் முதல் மனைவி உருக்கம்..!

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில், இடம் பெற்றுள்ள போட்டியாளர்களில் நடிகர் சரவணனும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் போட்டியாளர்கள் தங்களது வாழ்வில் நடந்த சோக சம்பவத்தை உண்மையாக, நேர்மையாக தெரிவிக்க வேண்டும்.

அந்த டாஸ்க்கில் சரவணன் தனது வாழ்வில் நடந்த மறக்க முடியாத சோக சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அதில், தனக்கு இரு மனைவிகள் இருப்பதாகவும், முதல் மனைவி தான் 2ஆவது மனைவிக்கு தாலி எல்லாம் வாங்கி கொடுத்தார்கள் என்றும் கூறினார். அம்மாவுக்காக தான் 2ஆவது திருமணமும் செய்து கொண்டேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், பலரும் இது குறித்து விமர்சனமும் செய்திருந்தனர்.

இந்த நிலையில், சரவணனின் முதல் மனைவி சூர்யா ஸ்ரீ ஏன், 2ஆவது திருமணம் செய்து வைத்தேன் என்பதற்காக காரணத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அடையார் திரைப்பட நிறுவனத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது இருவரும் காதலித்தோம். ஒரு கட்டத்தில் பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணமும் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு குழந்தையே இல்லை. சென்னையில் என்னென சிகிச்சை இருக்குமோ அத்தனையும் செய்து முடித்தோம். எந்த பலனும் இல்லை. ஒரு கட்டத்தில் வாடகை தாயாக இருக்கக் கூட விரும்பினேன்.

இதில், சரவணனின் பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லை. உடனடியாக 2ஆவது திருமணம் செய்து வைக்க தீவிரமாக ஏற்பாடுகள் செய்து வைத்தார்கள். எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. பிறகு சரவணனுக்கு திருமணம் செய்து வைக்க நானும் சம்மதம் தெரிவித்தேன். திருமணத்திற்கான அனைத்து செலவுகளையும் நானே செய்தேன். ஆனால், அந்த பெண்கள் வீட்டில் அவர்களது அப்பா அம்மா சம்மதம் தெரிவிக்கவில்லை. பிறகு அவர்களை பேசி சம்மதம் தெரிவிக்க வைத்தோம். தற்போது ஒரு மகன் இருக்கிறான் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ்3 வீட்டில், இந்த வாரம் வெளியேறுவது மீராவாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் சரவணன் மற்றவர்களைப் பற்றி முதலில் தெரிந்துகொள்வார். அதன் பிறகு தான் அவர்களுடன் பழகுவார். அதே போன்று தான் பிக் பாஸ் வீட்டிலும். ஒதுங்கி இருக்கிறார் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். அவர், மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார். எலிமினேஷனில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தாலும், அவர் வெளியேறமாட்டார் என்று சூர்யா ஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.