மீராவுக்கு முத்தம் கொடுத்த மோகன் வைத்யா! நெட்டிசன்கள் கிண்டல்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளரான மிராமினுதுக்கு மோகன்வைத்யா முத்தம் கொடுத்தது நெட்டிசன்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நேற்றைய டாஸ்க் ஒன்றில் தர்ஷன் மற்றும் சாக்சி விளையாட அந்த டாஸ்க்கிற்கு யாரும் உதவி செய்யக்கூடாது என்று விதி இருந்தும், விதியை மீறி மீராமிதுன் மறைமுகமாக உதவி செய்தார். இதனையடுத்து கவினுக்கும் மீராவுக்கும் பிரச்சனை வந்தது. மீராவை கவின் ‘அறிவிருக்கா’ என்று கேட்க இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. ஆளாளுக்கு மீராவுக்கு அட்வைஸ் செய்தனர். அவ்வாறு அட்வைஸ் செய்தவர்களில் ஒருவர் மோகன் வைத்யா.

இந்த நிலையில் தன்னை எல்லோரும் திட்டுகிறார்கள் என்று கூறி மீரா புலம்ப, மீண்டும் மோகன் வைத்யா கொஞ்சம் கடுமையாக மீராவை திட்டினார். இதனால் முதல்முறையாக அதிர்ச்சி அடைந்த மீரா, வழக்கம்போல் தனது அழுகை நாடகத்தை தொடங்கினார். அவரை சமாதானப்படுத்தும் நோக்கில் தர்ஷன் மீராவை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தினார்.

மீரா தன்னால்தான் அழுவதாக நினைத்து கொண்டு அங்கு வந்த மோகன் வைத்யா, மீராவை சமாதானப்படுத்தினார். நீ எனக்கு மகள் போன்றவர், உன்னை நான் திட்டவே இல்லை, மகளாக நினைத்து அறிவுரை மட்டுமே கூறினேன் என்று சொல்லி கொண்டே வந்தவர் திடீரென மிராவை கட்டிப்பிடித்து அவருக்கு முத்தம் ஒன்றையும் கொடுத்தார். இந்த முத்ததால் மீரா கூட அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் அவரது பக்கத்தில் இருந்த சாண்டி அதிர்ச்சி அடைந்தார். தர்ஷனும் தர்மசங்கடத்தில் நெளிந்தார்.

இந்த விவகாரத்தை வைத்து நெட்டிசன்கள் இஷ்டத்திற்கு கிண்டல் செய்து வருகின்றனர். எந்த அப்பா, தன்னுடைய மகளுக்கு முத்தம் கொடுப்பார். மோகன் வைத்யா இதெல்லாம் ஓவர் என கூறி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.