ஜோதிகாவால் அவமானப்பட்ட சிவகுமார்..!! கடுப்பில் குடும்பத்தினர்..!!!


ஜோதிகா பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை. திருமணத்திற்குப் பின் குடும்பத்திற்காக தனது நடிப்பிற்கு முழுக்கு போட்டார்.

அதன்பின்னர் இவர், நடிகை மஞ்சு வாரியர் நடித்து வெளிவந்த ஹவ் ஓல்ட் ஆர் யு என்ற படத்தில் நடிக்க மிகவும் விருப்பப்பட்டதால் அவரது கணவரான நடிகர் சூர்யா இந்தப் படத்தை தமிழில் 36 வயதினிலே என்ற பெயரில் தானே தயாரித்தார்.

இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தினை தொடர்ந்து நல்ல கதை அமைந்தால் தனது குடும்பத்தினர் அனுமதியோடு நடிப்பேன் என்று கூறி இருந்த ஜோதிகா, பின்னர் பிரம்மா இயக்கத்தில் மகளிர் மட்டும் படத்தில் நடித்து அந்தப் படமும் அவருக்கு வெற்றிப்படமாய் அமைந்தது.


இந்த நிலையில் தற்போது முழு நேர நடிகையாக மாற முடிவு செய்துவிட்ட ஜோதிகா, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை மட்டுமே தேர்வு செய்து நடிக்கத் துவங்கியுள்ளார். இதனால் ஏற்கனவே தன் குடும்பத்தினர் கோபத்திற்கும் ஆளாகினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஜோதிகா இத்தகைய சூழலில் தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வெளிவரும் நாச்சியார் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தில் இவர் பேசிய ஒரு வார்த்தை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வார்த்தையை பயன்படுத்தியதால் அதனை கண்டித்து ஏற்கனவே ஜோதிகா மற்றும் பாலா மீது மேட்டுப்பாளையம் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரின் மீதும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.


அதில், ஆபாசமாக பேசி நடித்துள்ள நடிகை மீது, வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஜோதிகாவின் மாமனாரான நடிகர் சிவகுமாரிடம் இது குறித்து பலர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனராம்.

இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் உள்ளாராம் சிவகுமார். திரும்பவும் ஜோதிகா படங்களில் நடித்து வருவதால் தற்போது மேலும் கடும் கோபத்தில் உள்ளனராம் சூர்யா குடும்பத்தினர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!