திருமணமானது உண்மை தான், கணவர் பற்றி முதல் முறையாக பேசிய மீரா மிதுன்

திருமணமானது உண்மை தான், என முதல் முறையாக தன்னுடைய கணவர் குறித்து பேசியுள்ளார் மீரா மிதுன்.
தமிழ் சினிமாவில் மாடலிங் நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன், அவர் தன்னை சூப்பர் மாடல் என்று சொல்லி கொண்டாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் பலருக்கும் பரிச்சயம் ஆகியுள்ளார்.

தனக்கு திருமணமாகவில்லை என கூறி அழகி போட்டியில் பங்கேற்று ஜெயித்தும் இருந்தார், பின்னர் தான் தெரிய வந்தது மீராவுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.

விதியை மீறியதால் மீரா மிதுனிடம் இருந்து பறிக்கப்பட்ட மிஸ் சௌத் இந்தியா பட்டம் சனம் ஷெட்டிக்கு சென்றது.

தன்னுடைய திருமணம் குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்து வந்த இவர் நேற்று பிக் பாஸ் வீட்டில் உண்மைகளை கொட்டியுள்ளார்.

5 வருடத்திற்கு முன்னர் என்னுடைய அப்பா எனக்கு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தார், திருமணத்திற்கு பிறகு தான் தெரிய வந்தது அவர் ஒரு சைக்கோ என்று, இதனால் என் அப்பா நொந்து போனார்.

https://www.instagram.com/p/ByqZ6blDREd/

இதனால் என் அப்பா நீ வெளிநாட்டிற்கு சென்று படி அல்லது உன்னுடைய விருப்பம் என கூறினார், ஆனால் என்னுடைய கணவருக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறி விட்டேன்.

ஒரு முறை பிறந்த நாளன்று நானே அவரை சந்திக்க சென்றிருந்தேன், அப்போது அவர் என்னை அறைந்து விட்டார்.

https://www.instagram.com/p/Bww8hygDmit/

உடனே எனக்கு ரத்தம் வந்து விட்டது. நாடு இரவில் நான் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்து விட்டேன் எனவும் இது தான் என்னுடைய திருமண வாழ்க்கை என கண்ணீருடன் பேசியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.