முதல் நாளே தண்ணியால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை, புதிய ப்ரோமோ

பிக்பாஸ்-3 பிரமாண்டமாக நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதுமே சமூக வலைத்தளங்களே செம்ம குஷியாகியது.

இனி 3 மாதத்திற்கு செம்ம ஜாலியாக பொழுதுப்போகும் என நினைத்துவிட்டனர், அந்த வகையில் முதல் நாள் இன்று அதிகாலையே ஒரு ப்ரோமோ வந்தது.

தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது, இதில் தண்ணீர் சிக்கனம் குறித்து பிக்பாஸ் கூறியுள்ளார்.

இதனால் அனைவரும் கைத்தட்டி அதை வரவேற்க பாத்திபா பாபு, இது கைத்தட்டி வரவேற்கும் விஷயமில்லை என்று சொன்னார்.

உடனே சேரன் ஏன் இதை வரவேற்க தான் கைத்தட்டினோம் என்று வாக்குவாதத்தை தொடங்கிவிட்டனர்.