பிக்பாஸ்-3 வீட்டிற்குள் வரும் முன்னணி டான்ஸ் மாஸ்டர்- யார் தெரியுமா அவர்?

இந்தியாவின் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றம் இந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை அந்தந்த மொழியில் இருக்கும் சினிமா பிரபங்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

ஒரு வீட்டில் 15 பிரபலங்கள் 100 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அவர்களில் மக்களின் வாக்குகள் அடிப்படையில், ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவர். இறுதியில் அதிக மதிப்பெண்களுடன் முன்னிலையில் இருப்பவரே வெற்றியாளர் ஆவார்.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் நாளை முதல் தொடங்க இருக்கிறது. 3வது முறையும் நடிகர் கமல்ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் விபரமும் கசிந்துள்ளது.

மிருணாளினி, விஜே ரம்யா, சாந்தினி, கஸ்தூரி… மேலும் பல அபிமானங்கள்..? எங்கிருக்கிறார்கள் தெரியுமா…?

இந்நிலையில், பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட நடிகை காஜலின் கணவரும், டான்ஸ் மாஸ்டருமான சாண்டி இந்த சீசனில் கலந்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவருடன், சர்ச்சை வில்லன் நடிகர் ராதாரவி, நடிகரும் இயக்குனருமான சேரன் ஆகியோரும் பிக்பாஸ் வீட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யார் இருந்தால் என்ன… நாளை தெரிந்துவிடும் யார் யார் பிக்பாஸ் வீட்டில் இருக்கப்போகிறார்கள் என்று. பொறுத்திருந்து பார்க்கலாம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.