புத்தரின் மடியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த நடிகை.. விளாசும் நெட்டிசன்கள்..!


நடிகர் ஆயுஸ்மான் குரானாவின் மனைவி தஹிரா காஷ்யப் கடந்த ஆண்டு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து தீவிர சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்த அவர் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா சென்ற இவர் புத்தர் சிலையின் மடியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அதை இணையத்திலும் பதிவிட்டு லைக்ஸை எதிர்பார்த்துக் காத்திருந்தவருக்குக் கிடைத்தது என்னமோ வசைச்சொற்கள் மட்டும் தான்.

ஆம் இந்தப் படத்திற்கு சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. புத்தரின் மடியில் அமர்ந்து புகைப்படம் எடுத்தது தவறு. கடவுளுக்கு மரியாதை கொடுங்கள் என்றும் மத தலைவரின் மடி மீது அமர்ந்து படம் எடுப்பது முட்டாள்தனமானது என்றும் விமர்சித்து வருகிறார்கள்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.