காதலித்து என்னை ஏமாற்றிவிட்டார்.. பிரபல நடிகர் மீது பரபரப்பு புகார் கொடுத்த நடிகை..!

தன்னுடைய சினிமா கேரியருக்காக தன்னை நடிகை காதலிப்பது போல் நடித்து பின் கழட்டிவிட்டதாக நடிகர் மனிஷ் நாக்தேவ் தெரிவித்துள்ளார்.

ஹிந்தியில் பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருபவர் ஸ்ரிஷ்டி ரோட். சல்மான்கான் நடத்திய இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார். இவரும் தொலைக்காட்சி நடிகர் மனிஷ் நாக்தேவும் காதலித்து வந்தனர். ஆனால், திடீரென இருவரும் பிரிந்து விட்டனர்.

3 ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கூட நடந்தது. இந்நிலையில்தான் அவர்கள் பிரிந்துவிட்டனர்.

https://www.instagram.com/p/BqMxJ59lm7S/

இதுபற்றி கருத்து தெரிவித்த மனிஷ் ‘ என்னுடைய காதலை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். திடீரென ஒரு நாள் போன் செய்து எல்லாம் முடிந்துவிட்டது என்றார். நான் என் கேரியரின் உச்சத்தில் இருக்கிறேன். இனியும் இந்த உறவில் எனக்கு விருப்பமில்லை. இதில் பேசுவதற்கு எதுவுமில்லை’ என்றார். அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

அதன் பிறகுதான் அவரின் கேரியக்காக என்னை பயன்படுத்திக் கொண்டது எனக்கு புரிந்தது. என் உணர்ச்சிகளுடன் விளையாடி என் நெட்வொர்க்கை அவரின் வெற்றிக்காக பயன்படுத்தியுள்ளார்’ என அவர் உருக்கமாக பேட்டி கொடுத்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.