கணவரை பிரிந்து 12 வருடம் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை..!

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ள சுமன் ரங்கநாத் 2வது திருமணம் செய்துள்ளார்.

80-90 களில் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தவர் நடிகை சுமன் ரங்கநாத். குறிப்பாக மாநகர காவல் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானர்.

தமிழில் சரியான வாய்ப்பு அமையாததால் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார். கன்னட பட தயாரிப்பாளர் வாலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2007ம் ஆண்டு கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

அதன்பின் 12 வருடங்கள் தனியாக வசித்து வந்த சுமன் ரங்கநாத், சமீபத்தில் குடகு மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் சஜன் சின்னப்பா என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது அவருக்கு 44 வயது ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.