மும்பையில் பத்திரிக்கையாளர்களை பார்த்து பயந்த நடிகை சமந்தா, காப்பாற்றிய நடிகர்

நடிகை சமந்தா பிஸியாக நடிகைகளில் ஒருவர். தமிழ், தெலுங்கு என கலக்கிய இவர் இப்போது பாலிவுட்டிலும் நடிக்க பிஸியாக கதைகள் கேட்டு வருகிறார்.

போட்டோ ஷுட்
படங்களின் கதைகள் கேட்டு வந்தாலும் போட்டோ ஷுட் நடத்துவதிலும் சமந்தா அதிக கவனம் செலுத்துகிறார். அண்மையில் அவர் பச்சை நிற உடையில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டது.

விவாகரத்துக்கு பிறகு சமந்தா தனது ஸ்டைலை மாற்றியிருப்பதாகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மும்பையில் சமந்தா
அண்மையில் மும்பை சென்றுள்ள சமந்தா ஒரு தயாரிப்பு நிறுவன இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் கதை கேட்க சென்றாரா அல்லது வேறு என்ன விஷயம் என்பது தெரியவில்லை. அவருடன் பாலிவுட்டின் இளம் நாயகன் வருண் தவானும் இருந்துள்ளார்.

அவர்கள் இருவரும் காரில் ஏற வரும்போது பத்திரிக்கையாளர்கள் சமந்தாவை  திடீரென சூழ்ந்துள்ளனர், இதனால் கொஞ்சம் பயந்துள்ளார் சமந்தா.

உடனே அவருடன் இருந்த வருண் தவான், சமந்தாவை பத்திரமாக அவரது காரில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!