போட்டியை காண தயாரா? அருண் விஜய் உடன் பாக்சிங் செய்ய தயாரான ரித்திகா சிங்!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக அருண் விஜய் இருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று தந்துள்ளன. அதில் கடைசியாக வந்த ‘தடம்’ படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் அசத்தி இருந்தார்.

இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று, வெற்றிப் படமானது. இதைத் தொடர்ந்து, பிரபாஸ் உடன் ‘சாஹோ’, விஜய் ஆண்டனி உடன் ‘அக்னிச் சிறகுகள்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து ’பாக்சர்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இதை பாலாவின் உதவி இயக்குநராக இருந்த விவேக் இயக்குகிறார். இந்தப் படத்திற்காக தற்காப்பு கலைகள் கற்று வருகிறார். இதை 7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த ஜானி டிரிங்குயேன் பயிற்றுவிக்கிறார். இதுதொடர்பான புகைப்படம் சமீபத்தில் வெளியாகி, இணையத்தில் வைரலானது.

https://twitter.com/arunvijayno1/status/1133013769016135680

இதற்காக அருண் விஜய் வியட்நாம் சென்றுள்ளார். சண்டைப் பயிற்சி மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் அறிவுரைப்படி, லின் பாங் பயிற்சி பள்ளியில் உடற்பயிற்சி செய்து வருகிறார். தினசரி 8 மணி நேரம் பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறார்.

https://www.instagram.com/p/ByFvDiXADRN/

இதில் ‘இறுதிச் சுற்று’ படத்தில் நாயகியாக நடித்த ரித்திகா சிங் நடிக்கிறார். இவரது கதாபாத்திரம் பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிஜ வாழ்க்கையில் பாக்சர் ஆன ரித்திகா சிங், படத்தில் அருண் விஜய் உடன் மோதுவாரா, இல்லையெனில் வெறுமனே ரொமான்ஸ் மட்டும் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.