திருமணத்துக்கு முன் கர்ப்பம் ஏன்? – அஜித் பட நடிகை விளக்கம்

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. இப்படத்தை அடுத்து படத்தின் 2-ம் பாகத்தை இயக்குநர் சக்ரி டொலெட்டி இயக்கினார். இப்படத்தில் அஜித்துடன் பார்வதி ஓமனக்குட்டனும், புருனா அப்துல்லாவும் நடித்திருந்தனர். பிரேசில் நாட்டில் மாடலிங் துறையில் செயல்பட்டு வரும் புருனா அப்துல்லா பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ‘அல்’ என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

https://www.instagram.com/p/BxZLmuUA_tm/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

இந்நிலையில் தற்போது புருனா அப்துல்லா 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். கர்ப்பம் தரித்திருக்கும் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

திருமணத்துக்கு முன்பாக தாய்மை அடைந்தது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் அவர், “திருமணத்துக்கான சான்றிதழ் வெற்றுக் காகிதம் தான். இரு உள்ளங்களை இணைக்க திருமண சான்றிதழ் போதுமானது கிடையாது. திருமணம் செய்துகொண்ட சிலர் விவாகரத்து செய்து கொள்கின்றனர். ஒரு சிலர் சந்தோஷமில்லாமல் வாழ்கின்றனர். காதலைத் தவிர வேறொன்றும் மக்களை இணைத்து வைத்திருக்க முடியாது என நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்

மேலும், திருமணம் என்பது காதலின் அடையாளம் என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது இது உண்மையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.