தடைகளைத் தாண்டி வசூல் குவிக்க திரைக்கு வரும் விஷாலின் அயோக்யா!

அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் அயோக்யா. பெண்களுக்கு சமூகத்தில் நடக்கும் அவலங்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, பெண்களை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஆண்களுக்கு உடனடியாக தண்டனை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்குறி எழுகிறது. இதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா? இல்லை புதிய சட்டம் இயற்றப்படுமா? என்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஷாலுடன் இணைந்து கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன், சனா கான், யோகி பாபு, ராகுல் தாத்தா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் இப்படம் இன்று வெளியாகயிருந்தது. இந்த நிலையில், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அத்தனை தடைகளையும் தாண்டி இன்று உலகம் முழுவதும் விஷாலின் அயோக்யா படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதிப்பிரச்சனை காரணமாக அயோக்யா படம் நேற்று வெளியாகவில்லை என்றும், இதனால், விஷாலே தயாரிப்பாளருக்கு ரூ.1 கோடி பணத்தை கொடுத்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றது. இதையடுத்து, படம் இன்று திரைக்கு வருகிறது.

காலை 10.45 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது. மேலும், நேற்று அயோக்யா படத்தை காண ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இன்னும் 5 நாட்களுக்குள் அவர்களது வங்கிக் கணக்கிற்கு பணம் திரும்ப செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன், விஷாலின் இரும்புத்திரை படம் மே 11, 2018ம் ஆண்டு வெளியானது. அதே போன்று தற்போது அயோக்யா படமும் வெளியாகிறது.

https://twitter.com/eshvishal/status/1127064668340506624

தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நிதிப் பிரச்சினை காரணமாக நேற்று வெளியாகாத விஷாலின் #அயோக்யா ,

அதர்வாவின் 100 ஆகிய இரண்டு திரைப்படங்களும் இன்று காலை காட்சி முதல் திரையிடப்படுகின்றன.. #Ayogya
இதற்கு முன்னதாக நேற்று முன்தினம் வெளியாகயிருந்த அதர்வாவின் 100 படமும் வெளியாகவில்லை. இப்படமும் பல பிரச்சனைகளைத் தாண்டி இன்று திரைக்கு வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.