மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ். ஜானகி, அதிர்ச்சியில் ரசிகர்கள் – காரணம் இது தான்.!

தமிழ் திரையுலகில் பல ஆயிரம் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதை தன்னுடைய குரலால் கவர்ந்திழுத்தவர் எஸ். ஜானகி. அன்று முதல் இன்று வரை இவருடைய பாடல்களுக்கு தனி வரவேற்பு உண்டு.

இவர் சமீபத்தில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதற்கான காரணமும் தெரிய வந்துள்ளது. அதாவது மைசூரில் உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்த போது குளியலறையில் வழுக்கி விழுந்துள்ளார்.

இதனால் இடுப்பெலும்பில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.