தர்பார் படப்பிடிப்பில் கல்லெறிந்த கல்லூரி மாணவர்கள் – உண்மையில் நடந்தது என்ன?

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதில் ரஜினி, யோகி பாபு, நிவேதா தாமஸ், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் இதன் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவர்களுக்கு நிறைய கெடுபிடிகள் விடுத்ததால் படப்பிடிப்பு தளத்தில் மாணவர்கள் ஒன்று திரண்டு கற்களை வீசி எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது.

ஆனால் அதை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.