வருங்கால மாமியாருடன் வெளிநாட்டில் ஆல்யா மானாசா.. இதோ புகைப்படம்

ராஜா ராணி தொடர் புகழ் ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் கார்த்தி ஜோடி வெளிநாடுகளில் சுற்றி வரும் புகைப்படங்களை தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் தனியார் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் ராஜாராணி சீரியலில் சஞ்சீவ் மற்றும் ஆல்ய மானஸா ஆகிய இருவரும் தான் மிகவும் பிரபலம்.

https://www.instagram.com/p/BwpQegIHzC3/?utm_source=ig_embed

இந்த தொடரின் மூலம், இவர்களுக்கு மிகவும் பிரபலமான சீரியல் ஜோடிகள் என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆல்யா மானஸாவிற்கு சிறந்த நடிகைக்கான விஜய் டெலி அவார்ஸ் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் போது, சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா ஜோடி மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயம் செய்து கொண்டனர்.

விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இருவரும் காதலை பரிமாறிக் கொண்ட சந்தோஷத்தில் சீனா, சிங்கப்பூர் என்று குடும்பத்துடன் வெளிநாடுகளில் சுற்றி வருகின்றனர்.

https://www.instagram.com/p/Bw2KEhYHK9_/?utm_source=ig_embed

அப்போது வெளிநாடுகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ராஜா ராணி ஷூட்டிங் இனி சிங்கப்பூரில் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அம்மா மற்றும் அல்யா மானசாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.