முதல் முறையாக தன் குழந்தையின் முகத்தை காட்டிய செண்ட்ராயன்… வைரலாகும் புகைப்படம்..!

தனது ஆண் குழந்தையை கையில் வைத்திருந்தபடி சென்றாயம் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் வந்த பொல்லாதவன், ஆடுகளம், சிலம்பாட்டம், மூடா்கூடம் உள்ளிட்ட படங்களில் நடித்தவா் சென்றாயன். மேலும் ஜீவா நடிப்பில் வந்த ரௌத்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்றிருந்தார். இவ்வளவு ஏன், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2ம் பாகத்தில் கலந்து கொண்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கயல்விழி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சென்றாயனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மகனை தூக்கிக்கொண்டு வீட்டில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதோடு, குழந்தையை பாயில் படுக்க வைத்திருந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.