கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஆஹா ஓஹோன்னு பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா தான். மனதில் பட்டத்தை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசியும். மிகவும் நேர்மையாக நடந்துகொண்டதாலும் மக்கள் அனைவருக்கும் இவரை பிடித்துவிட்டது.
அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ்வுடன் ஓவியா காதலில் விழுந்தார். ஆனால், ஆரவ்வோ, ஓவியா மீது காதல் இல்லை என்று கூற, அதனை ஏற்று கொள்ளமுடியாமல் மிகுந்த மனவருத்தத்துடன் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின் அந்நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் இருவரும் அடிக்கடி ஊர்சுற்றுவது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி சமூகவலைத்தளத்தில் தீயாக பரவியது.
இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் காதலிக்க தொடங்கிவிட்டனர் என்றும் இருவரும் சேர்ந்து லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் வதந்திகள் பரவ, நங்கள் நட்பாகத்தான் பழகி வருகிறோம் என்று கூறினார் ஓவியா.
Special thanks to each and everyone who took the time to wish me a happy birthday!! it was truly amazing..!! pic.twitter.com/L46Z08rNtZ
— Oviyaa (@OviyaaSweetz) April 29, 2019
இந்த நிலையில் தற்போது நடிகை ஓவியா தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக நேற்று இரவு ஆரவ் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ட்விட்டரில் ஓவியாவின் ரசிகர்கள் வாழ்த்துக்கூறி ட்ரெண்டிக் செய்து வருகின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.