விஜய் நடிப்பில் மெர்சல் என்ற பிரம்மாண்ட படத்தை தயாரித்தது ஸ்ரீதேணான்டாள் பிலிம்ஸ். இப்படத்தின் ஃபஸ்ட் லுக் முதல் ஆடியோ வெளியீடு, டீஸர் வெளியிடு என அனைத்தையும் மிகவும் சரியான கணிப்போடு வெளியிட்டனர்.
படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று வரும் நிலையில் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணியிடம் அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா என்று ஒரு பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், அஜித் மிகச் சிறந்த நடிகர், அவருடைய எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். அவர் இப்போது கூட தயார் என்றால் அவரது படத்தை தயாரிக்க நான் ரெடி என்று கூறியுள்ளார்.
அஜித் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விசுவாசம் என்ற பெயரில் ஒரு புதிய படம் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#