சீரியல் நடிகை சந்தோஷிக்கு சர்ப்ரைஸாக நடந்த வளைகாப்பு – வெளியான புகைப்படங்கள்.!

தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் மக்கள் மனதை கவர்ந்த நடிகைகள் பலர் உள்ளனர். அந்த வரிசையில் மரகதவீணை உள்ளிட்ட பல சீரியல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் சந்தோஷி.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரியல்கள் பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்த சந்தோஷி தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இவர் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாகியும் உள்ளார். இதனால் இவரது தோழிகளும் சக நடிகைகளுமான பிரபலங்கள் சிலர் ஒன்று சேர்ந்து சந்தோஷிக்கு சர்ப்ரைஸாக வளைகாப்பு செய்துள்ளனர்.

இது குறித்து சந்தோஷி இது எனக்கு ஐந்தாவது மாதம், எனக்கு இன்னொருமுறை வளைகாப்பு குடும்பத்தினர் பேசி வருகின்றனர். இரண்டு முறை வளைகாப்பு நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.