நம்ப வச்சு என்னை மோசம் பண்ணீட்டா.. நடந்தது இது தான்! நடிகை சங்கீதாவின் தாய் வேதனை

திரைப்பட நடிகையான சங்கீதா மீது அவரது தாய் புகார் கொடுத்திருப்பதாக கூறப்பட்டது. அந்த புகாரில் சங்கீதா தன்னை வீட்டை விட்டு துரத்துவதாக அவரது தாய் குறிப்பிட்டிருந்தார்.

இதைப் பற்றி எந்த ஒரு ஊடகமும் விளக்கம் அளிக்காமல் சங்கீதா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் என்னை 13 வயதிலையே வேலைக்கு அனுப்பினாயா? பிளாங்க் செக்கில் கையெழுத்து வாங்கினாயே என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க, அவரது தாயாரிடம் சங்கீதா சொல்வது உண்மையா என்று பிரபல தமிழ் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது.

அப்போது சங்கீதாவின் தாய் பானுமதி கூறுகையில், சங்கீதா 1979–ல் பிறந்தா, அவளுக்கு 11 வயது இருக்கும் போதே அப்பா இறந்துவிட்டார்.

அதன் பின் அவளுக்கு எல்லாமே நான் தான், சினிமாவில் நுழைந்தும் அவளைப் பற்றி எந்த ஒரு கிசுகிசு கூட வராதபடி வளர்த்து வந்தேன்.

அவள் நான் 13 வயதில் வேலைக்கு அனுப்பியதா சொல்லியிருக்காங்க, ஆனால் உண்மையில் அவளை நான் கான்வெண்டில் படிக்க வைத்தேன், அவளின் பூஞ்சோலை படம் ரிலீஸ் ஆனப்போ, அவங்க ப்ளஸ் ஒன் ஸ்டூடன்ட், அவங்க சொல்ற மாதிரி அந்த வயசுலதான் எல்லோரும் ப்ளஸ் ஒன் படிப்பாங்களா நீங்களே யோசிச்சு பாருங்க என்று கூறியுள்ளார்.

மேலும் நடிப்பில் கூட நான் அவளை வற்புறுத்தவில்லை, விருப்பம் இருக்கா? இல்லையா? என்று கேட்டு முடிவெடுத்தென்.

எங்க அப்பா பெரிய தயாரிப்பாளரா இருந்தவர். எனக்கு யாரையும் அப்படி வற்புறுத்தி, அதன் மூலமாக சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை, எல்லாவற்றிற்கு பிரச்சனை இந்த வீடு தானே, இந்த வீடு எப்படி அவருடைய பெயருக்கு போயிருக்கும், நான் வாங்கிய வீடு தானே, சகோதரர்கள் வெளிநாட்டில் இருந்ததால், அவர் மீது இருந்த நம்பிக்கையில் இந்த வீட்டை எழுதி கொடுத்தேன், ஆனால் அந்த நம்பிக்கைய இப்போ மோசம் பண்ணீட்டாரு.

அதே போன்று அவருக்கு முதலில் இருந்த பழைய நண்பர்கள் எல்லாம் இப்போது டச்சில் இல்லை, இப்போது இருப்பவர்கள் எல்லாம் கிரிஷின் குடும்பத்தினரும், நண்பர்களும் தான், நான் அதனால் அவர்கள் வாழ்க்கையை பற்றி எதுவும் கேட்டுக் கொள்வதில்லை.

ஒரே வீட்டில் இருந்த போதும் நாங்கள் இருவரும் சரியாக பேசி பல வருடங்கள் ஆகிறது என்றால் நம்ப முடிகிறதா? நடக்கிறது நடக்கட்டும் என்று வேதனையில் கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.